
துளசி
இலை விஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தது. இந்து மத பாரம்பரியத்தில் இது
புனிதமான வழிபாட்டுக்குரிய செடியாகவும் இந்த இலையில் விஷ்ணுவே வாசம்
செய்வதாகவும் நம்பிக்கையுண்டு. அதைத் தாண்டி இந்த துளசிச் செடியில் ஏராளமான
மருத்துவ குணங்கள் நிரம்பிருக்கின்றன. அதனால் தினமும் உங்களுடைய நார்மல்
டீக்கு பதிலாக என்னென்ன காரணங்களுக்காக இந்த துளசி டீயை குடிக்க வேண்டும்
என்று இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.
துளசியின் மகத்துவம்
பொதுவாக
துளசி செடியை நாம் வீட்டில் வளர்ப்போம். இது ஒரு புனிதமான செடியாகும்.
இறைவனுக்கு இந்த இலைகளை மாலையாக அணிவிப்பது இந்து மத சம்பிரதாயங்களில்
உண்டு. அதே சமயம் துளசி செடி ஒரு மூலிகை செடியாகும். துளசி இலைகள் பல்வேறு
ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு மூலிகை இலையாகும்.

பொதுவாக
நம்மில் பலருக்கு தேநீர் அருந்தும் பழக்கம் உண்டு. ஒரு நாளின் வெப்பநிலை,
உங்கள் மனநிலை ஆகியவற்றைப் பொறுத்து ஒரு நாளில் குறைந்தது இரண்டு அலல்து
மூன்று கப் தேநீர் பருகுவதை சிலர் பழக்கமாகக் கொண்டிருப்பார்கள். கிராம்பு,
லவங்கப்பட்டை , ஏலக்காய் , இஞ்சி, சுக்கு போன்ற பல்வேறு பொருட்கள் கொண்டு
நாம் தேநீர் தயாரிப்போம். ஆனால் இவற்றுடன் துளசி சேர்த்து தேநீர்
தயாரிப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. நீங்கள் பருகும்
தேநீரில் துளசி சேர்ப்பதால் உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து
இப்போது பார்க்கலாம்.
மனஅழுத்தத்தை நிர்வகிக்க

துளசி
அதன் மருத்துவ பயன்பாடு காரணமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக
இருந்து வருகிறது. உடல் சார்ந்த பல்வேறு கோளாறுகளுக்கு எளிய தீர்வாக
வீட்டில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை துளசி. துளசியில் ஆன்டிஆக்சிடெண்ட்
நிறைந்து காணப்படுவதால் , ப்ரீ ராடிக்கல்களால் உண்டாகும் சேதங்களிலிருந்து
உடல் திசுக்களைப் பாதுகாக்கிறது. கார்டிசால் என்னும் ஹார்மோனை எளிதாக
நிர்வகிக்க துளசி உதவுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த
ஹார்மோன் மனஅழுத்தத்தை ஊக்குவிக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். துளசி டீ
பருகுவதால் , கார்ட்டிசால் அளவு குறைக்கப்பட்டு மனஅழுத்தம் இல்லாமல்
மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. ஆகவே இந்த நன்மையை நீங்கள் பெறுவதற்கு
துளசி டீ பருகுங்கள்.
வாய் ஆரோக்கியத்திற்கு நல்லது

உங்களுடைய
வாய் தொடர்பான ஆரோக்கியத்திற்கு துளசி மிகுந்த நன்மை அளிக்கிறது.
நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் கொண்ட துளசி , வாயில் இருக்கும் கிருமிகள்
மற்றும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் வாய்
துர்நாற்றத்தைப் போக்கி நறுமணம் தரவும் உதவுகிறது.எனவே துளசி தேநீர் பருகி
உங்கள் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் மற்றும் புத்துணர்ச்சியுடன்
இருக்கலாம். 4 துளசி இலையைக் கசக்கி அதற்கிடையில் ஒரு கிராம்பு மற்றும் ஒரு
கருமிளகு வைத்து சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து அடக்கிக் கொண்டு,
படுத்திருங்கள். சொத்தைப் பற்களில் இருக்கும் புழுக்கள் வெளியேறிவிடும்.
சுவாசம் தொடர்பான கோளாறுகளுக்கு

நீங்கள்
பருகும் தேநீரில் துளசி இலைகளை சேர்த்துக் கொள்வதால், இருமல், சளி,
ஆஸ்துமா , நுரையீரல் அழற்சி போன்ற சுவாசம் தொடர்பான பாதிப்புகள் குறைய
உதவுகிறது. இருமலைப் போக்க உதவும் தன்மைகள் மற்றும் சளி அல்லது கோழைகளை
சுவாச மண்டலத்திலிருந்து அகற்றி நிவாரணம் தரும் தன்மை போன்றவை துளசியில்
அதிகம் உள்ளது. ஆகவே துளசி சேர்க்கப்பட்ட தேநீர் பருகி உங்கள் சுவாச மண்டல
ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.
இரத்த சர்க்கரை அளவு

பல்வேறு
ஆரோக்கிய நன்மைகளைக் கடந்து , துளசி தேநீரைப் பருகுவதால் உங்கள் உடலின்
இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் கூடுதலாக , துளசி
தேநீர் தினமும் பருகி வருவதால் உங்கள் கொழுப்பு மற்றும் கார்போ வளர்சிதை
மாற்றத்திற்கு உதவுகிறது மற்றும் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை ஆற்றலாக
மாற்றம் பெறுவதை உறுதி செய்கிறது. ஆகவே இனிமேல் துளசியை உங்கள் தேநீரில்
கட்டாயம் இணைத்துக் கொள்ளுங்கள். நீரிழிவு நோயுள்ளவர்கள்
கீல்வாதம்
துளசி,
இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கிறது என்று நாம் முன்னர்
பார்த்தோம். இது மட்டுமில்லாமல் , கீல்வாதம் உள்ள நோயாளிகளுக்கு துளசி
மிகுதியான நன்மைகளைத் தருகிறது. துளசியில் உள்ள யூஜினால் மூட்டுகளில்
மற்றும் செரிமான பாதையில் அழற்சி எதிர்ப்பு பண்பை வழங்கி உதவுகிறது.

ஆக,
உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் துளசி பல்வேறு நன்மைகளைத்
தருகிறது. எனவே நீங்கள் அவசியம் துளசி இலைகளை சேர்த்து தேநீர் தயாரித்து
பருகுங்கள். இனிமேல் நீங்கள் வழக்கமாகக் குடிக்கும் டீயை குடிப்பதை
நிறுத்திவிட்டு துளசி டீ குடிக்க ஆரம்பிக்க இதைவிட வேறு காரணங்கள் தேவையா
என்ன?...
Comments
Post a Comment