நம்
உடலுறுப்புகள் நன்றாக செயல்பட போதிய தண்ணீர் சத்து தேவை. ஒரு சராசரி
மனிதன் ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீராவது எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் நம் உடலில் உள்ள பல செயல்கள் நடக்க தண்ணீர் அவசியம். அந்த வகையில்
தண்ணீர் சத்து குறையும் போது நம் உடல் அதனை சில அறிகுறிகளாக காட்டுகிறது.
தலைவலி, சோர்வு போன்ற அறிகுறிகளைக் கொண்டு இதை எப்படி அறியலாம், வாங்க
தெரிஞ்சுப்போம்.
நம்
உடம்பின் ஆரோக்கியத்திற்கு நீர் மிகவும் அவசியம். ஏனெனில் போதுமான
நீர்ச்சத்து இல்லாவிட்டால் உடலுறுப்புகள் தனது வேலைகளை சரிவர செய்யாது.
சிறுநீரகம் முதல், உணவை செரிக்க கூட குடலுக்கு போதுமான நீர்ச்சத்து
தேவைப்படுகிறது. அதனால் தான் மருத்துவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 8
டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் நாம் தினமும்
போதுமான தண்ணீர் தான் குடிக்கிறோமா என்றால் கேள்விக்குறி தான்.
ஆபிஸில் இருக்கும் போதும் சரி வீட்டில் இருக்கும் போதும் சரி தண்ணீரை எடுத்து கொடுப்பதற்கு கூட சோம்பேறித்தனம் படுகிறோம். இதன் விளைவு செரிமானம் ஒழுங்காக நடைபெறாது, சீறுநீரக தொற்று, வறண்ட சருமம் போன்ற ஏகப்பட்ட பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடுகிறது. நம் உடம்பில் நீர்ச்சத்து குறைந்துள்ளது என்பதை சில அறிகுறிகளை வைத்து அறிந்து கொள்ளலாம். கீழ்க்கண்ட இந்த 5 அறிகுறிகள் தென்பட்டால் உடனே போதுமான தண்ணீர் எடுத்துக் கொள்ள முற்படுங்கள்.
நம்
மூளையின் சரியான செயல்பாட்டிற்கு கூட நீர் மிகவும் அவசியமான ஒன்று.
போதுமான நீர்ச்சத்து உடலில் இல்லாவிட்டால் மூளைப்பகுதியிலும் வறட்சி
ஏற்படும். நரம்புகள் சுருங்கி கடுமையான வலி ஏற்படுகிறது. இதுவே தலைவலி
எனப்படுகிறது. அதிலும் இன்றைய மாறிவிட்ட சூழலில் பெரும்பாலானோருக்கு அதிக
அளவில் ஒற்றைத் தலைவலி வருவதற்கும் போதிய நீர்க்குடிக்காமல் நீர்ச்சத்து
குறைபாடு ஏற்படுவது தான் முதன்மையான காரணமாக அமைகிறது. மூளை நம் மண்டை
ஓட்டின் பகுதியில் இருந்து சுருங்கி இழுப்பு ஏற்படுகிறது. இதனால் வலியுடன்
தலைவலி வர ஆரம்பிக்கும். இது நீர்ச்சத்து குறைவால் ஏற்படும் தலைவலி. எனவே
தலைவலி வருவது போல் இருந்தாலோ, தலைவலி வந்தாலோ நீங்கள் முதலில் செய்ய
வேண்டிய காரியம் என்ன தெரியுமா? தண்ணீர் குடிப்பது தான்.
நம்முடைய
மூளை 90% தண்ணீரால் ஆனது. அதனால் தான் அது கொழகொழ தன்மையுடன்
காணப்படுகிறது. மூளையில் இருக்கும் லிக்விடு படலம் மூளைச் செயல்பாட்டில்
முக்கிய பங்கு வகிக்கின்றன. மூளைப் பகுதியில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட
ஏற்பட சோர்வடைந்து, மூளை சுறுசுறுப்புடன் இல்லாமல் இருக்கும். அந்த
சமயங்களில் உங்களுடைய மனதை ஒருமுகப்படுத்தி எந்த வேலையையும் செய்ய
முடியாது. நம் கவனம் சிதறலடைகிறது. எத்த வேலையும் சரி வர செய்ய முடியாமல்
சிதறுவோம். ஒரு விஷயத்தில் கவனமாக செயல்பட முடியாமல் போகும். எனவே கவனச்
சிதறல் ஏற்படும் போதும் நீங்கள் சோர்வாக உணரும் போதும் உடனடியான எழுந்து
சென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு பிறகு வேலையை ஆரம்பிக்க
பாருங்கள்.
வாயில்
உமிழ்நீர் சுரந்தால் சிலர் மிகவும் எரிச்சலடைவார்கள். ஆனால் எவ்வளவுக்கு
எவ்வளவு அதிகமாக சுரக்கிறதோஅவ்வளவு நன்மைகள் உங்கள் உடலில் நடக்கும்.
வாயில் உமிழ்நீர் அதிகமாக சுரந்தால்தான் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளும்
அதிகமாக இருக்கும். அப்படி நிறைய உமிழ்நீர் சுரப்பதற்கு போதுமான அளவு
நீர்ச்சத்து உடம்பில் இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக எடுத்துக் கொள்ளாத
போது வாய் வறண்டு போய் உலர ஆரம்பித்து விடும். சில பேருக்கு உதடுகளில்
வெடிப்பு ஏற்பட்டு வலி கூட ஏற்படும். அதோடு கெட்ட பாக்டீரியாக்களின்
பெருக்கம் அதிகமாகி பற்சொத்தை, வாய் துர்நாற்றம் போன்றவற்றை சந்திக்க
நேரிடும். வாய் துர்றாற்றம்ஈ உதடு மற்றும் வாய் உலர்ந்து போனால் லிப் பாம்
போட்டுக் கொண்டு உட்காருவதை நிறுத்திவிட்டு, முதலில் தண்ணீர் குடியுங்கள்.
நீங்கள் உடனே தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதைத் தான் உங்கள் உடல் இந்த
மாதிரி வழிகளில் கேட்கிறது.
சில
பேருக்கு சாப்பிட்டாலும் பசி என்னவோ அடங்காது. ஆனால் உண்மையில் அது
பசியின் அறிகுறி அல்ல அது தாகத்தின் அறிகுறி. உங்க உடம்பில் போதுமான
நீர்ச்சத்து இல்லாவிட்டால் தண்ணீர் தேவைப்படும். அதை தவறுதலாக பசி என்று
நினைத்து சாப்பிடுபவர்களும் உண்டு. அடிக்கடி பசி எடுத்தால் அது பசியாக
இல்லாமல் தாகமாக இருக்கலாம். எனவே நன்கு அறிந்து செயல்படுங்கள். நிஜமாகவே
பசி எடுப்பது போல தெரிந்தாலே முதலில் ஒரு பெரிய கிளாஸ் நிறைய தண்ணீர்
குடியுங்கள். இது நீங்கள் அளவுக்கு அதிகமான கலோரிகளைச் சாப்பிடாமல் தடுத்து
நிறுத்தும். ஆனால் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது.
சாப்பிடுவதற்குக் கொஞ்ச நேரத்திற்கு முன்னால் தண்ணீர் குடிக்கிற பொழுது,
ஜீரண மண்டலத்தைச் சுத்தப்படுத்தும் வேலையை செய்ய ஆரம்பிக்கும்.
நெஞ்செரிச்சல் தீரும்.
நீங்கள்
எதாவது செய்யும் போது களைப்பாகவும் சோம்பலாகவும் உணர்ந்தால் அது உங்க
உடம்பில் போதிய நீர்ச்சத்து இல்லாததைக் காட்டுகிறது. ஏனெனில் தண்ணீர் சத்து
இல்லாவிட்டால் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும், உடம்புக்கு எரிபொருளான
ஆக்ஸிஜன் சரிவரக் கிடைக்காது. இதனால் நீங்கள் எனர்ஜி இல்லாமல் சோர்வாக
உணர்வீர்கள். எனவே இனி சோர்வான சமயத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து
வேலையை ஆரம்பியுங்கள். தண்ணீரை விட நம்முடைய உடலுக்கு எனர்ஜி தரும் உணவு
வேறெதுவும் இல்லை.
நன்றி- https://tamil.samayam.com/lifestyle/health/these-5-signs-says-that-your-body-needs-water-immedietly/articleshow/74026687.cms?story=1
தண்ணீரின் தேவை
ஆபிஸில் இருக்கும் போதும் சரி வீட்டில் இருக்கும் போதும் சரி தண்ணீரை எடுத்து கொடுப்பதற்கு கூட சோம்பேறித்தனம் படுகிறோம். இதன் விளைவு செரிமானம் ஒழுங்காக நடைபெறாது, சீறுநீரக தொற்று, வறண்ட சருமம் போன்ற ஏகப்பட்ட பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடுகிறது. நம் உடம்பில் நீர்ச்சத்து குறைந்துள்ளது என்பதை சில அறிகுறிகளை வைத்து அறிந்து கொள்ளலாம். கீழ்க்கண்ட இந்த 5 அறிகுறிகள் தென்பட்டால் உடனே போதுமான தண்ணீர் எடுத்துக் கொள்ள முற்படுங்கள்.
தலைவலி
கவனச் சிதறல்
உலர்ந்த வாய், வாயில் துர்நாற்றம் வீசுதல்
பசி எடுத்தல்
சோம்பல் மற்றும் சோர்வாக உணர்தல்
நன்றி- https://tamil.samayam.com/lifestyle/health/these-5-signs-says-that-your-body-needs-water-immedietly/articleshow/74026687.cms?story=1
Comments
Post a Comment